ADDED : செப் 01, 2026 03:58 AM

கொச்சி: கடந்த நிதியாண்டில் தேங்காய் ஏற்றுமதி 62 சதவீதம் உயர்ந்து, 7,038 கோடி ரூபாயை எட்டியது என தென்னை வளர்ச்சி வாரியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில், தேங்காய் சிரட்டைக்கரி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இது மட்டுமே, 4,688.89 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கயிறு உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து, தேங்காய் பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பில், இது 67 சதவீதம். தேங்காய் சிரட்டைக்கரி ஏற்றுமதி அளவு 1.80 லட்சம் டன்.
தேங்காய் பொருட்களுக்கான சர்வதேச தேவை அதிகரிப்பு, பதப்படுத்தும் திறன், பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு தேவை அதிகரித்தது ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
