sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 இந்தியாவுக்கேற்ற கலப்பின கோதுமை 'கொர்டேவா' நிறுவனம் அறிவிப்பு

/

 இந்தியாவுக்கேற்ற கலப்பின கோதுமை 'கொர்டேவா' நிறுவனம் அறிவிப்பு

 இந்தியாவுக்கேற்ற கலப்பின கோதுமை 'கொர்டேவா' நிறுவனம் அறிவிப்பு

 இந்தியாவுக்கேற்ற கலப்பின கோதுமை 'கொர்டேவா' நிறுவனம் அறிவிப்பு


ADDED : டிச 04, 2025 03:15 AM

Google News

ADDED : டிச 04, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்,:இந்தியாவுக்கு ஏற்ற கலப்பின கோதுமையை உருவாக்க இருப்பதாக, 'கொர்டேவா அக்ரி அயன்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் செயல்பாடுகள் பிரிவின் தலைவர் புரூக் கன்னிங்ஹாம் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு முதலீட்டாளர் தினத்தன்று, கலப்பின கோதுமை உருவாக்கம் குறித்து அறிவித்தோம்.

தற்போது இந்தியாவுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இந்தியா எங்கள் முன்னுரிமையில் உள்ள நாடு ஆகும்.

பொதுவாக கலப்பின கோதுமை விதையை உருவாக்க 25 ஆண்டுகள் பிடிக்கும். இந்நிலையில், இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற கலப்பின கோதுமையை உருவாக்கத் தொடங்கிவிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வர்த்தக ரீதியில் கோதுமை இந்தியாவில் புழக்கத்துக்கு வர 10--15 ஆண்டுகள் ஆகும் என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கொர்டேவா நிறுவனம், கடந்த 1972 முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் இரண்டு பெரிய ஆய்வு மையங்களை நடத்துகிறது. எத்தனாலுக்குக் கிடைத்துவரும் வரவேயற்பை அடுத்து, இந்தியாவில் மக்காச்சோளத் துறையில் இந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.






      Dinamalar
      Follow us