வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு
வீட்டு கடனுக்கான தேவை சிறு நகரங்களில் அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2026 01:03 AM

புதுடில்லி: வீட்டுக் கடனுக்கான தேவை, நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களைத் தாண்டி, மதுரை, சண்டிகர் உள்ளிட்ட இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக, 'அர்பன் மனி' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விபரங்கள்:
கடந்தாண்டு பெறப்பட்ட மொத்த வீட்டுக் கடன்களில், சிறு நகரங்களின் பங்கு 64 சதவீதமாக அதிகரிப்பு. இது, முந்தைய ஆண்டில் 60 சதவீதமாக இருந்தது
வளர்ச்சியை பொறுத்தவரை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிறு நகரங்களில் வீட்டுக் கடன் பெறுவது 81 சதவீதம் அதிகரிப்பு. மெட்ரோ நகரங்களில் 52 சதவீதம் உயர்வு
உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு மையங்கள் விரிவாக்கம் மற்றும் மலிவு விலை வீடுகள் பரவலாக கிடைப்பது ஆகியவற்றால் இந்நகரங்களில் வீடுகளின் தேவை அதிகரிப்பு
மெட்ரோ நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்து காணப்படுவதால், வீடு வாங்க விரும்புவோர், சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை ஒட்டிய பகுதிகளில் ஆர்வம்
மதுரை, சண்டிகர், ஜெய்ப்பூர், சூரத் ஆகிய நகரங்களில் வீட்டுக் கடன் வாங்குவது, கடந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.

