ADDED : செப் 23, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு, வட்டி போன்றவற்றை, மின்னணு முறையில் மட்டும் வழங்குமாறு 'செபி' பரிந்துரை செய்துள்ளது.
மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்வதால், விரைவாக செலுத்தப்படுவதுடன் தவறுகள் குறையும். மேலும், காகிதப் பயன்பாடு குறைவதோடு, நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளும் குறையும்.
இது குறித்து, வரும் அக்., 11ம் தேதி வரை, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, செபி தெரிவித்துள்ளது.