ADDED : மே 10, 2026 12:45 AM

புதுடில்லி: நாடு முழுதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ், 'இ- - வே பில்' பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து 13.33 கோடியாக உயர்ந்துள்ளதாக, ஜி.எஸ்.டி.என்., அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட சரக்குகளை கொண்டு செல்ல, 'இ- - வே பில்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் 'இ- - வே பில்கள்' முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 5.10 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தான் அதிகபட்சமாக 14.06 கோடி 'இ- - வே பில்' வழங்கப்பட்டுள்ளது என, ஜி.எஸ்.டி.என்., தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தரவுகள், நாட்டின் சரக்கு வினியோகம் மற்றும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுவதாகவும், நடப்பு நிதியாண்டில் தனியார் இறுதி நுகர்வு செலவினம் 7.60 சதவீதமாக இருக்கும் எனவும், 'இந்தியா ரேட்டிங்ஸ்' நிறுவனம் கணித்துள்ளது.
