அனில் அம்பானி வழக்கில் சிறப்பு குழு அமைத்தது ஈ.டி.,
அனில் அம்பானி வழக்கில் சிறப்பு குழு அமைத்தது ஈ.டி.,
ADDED : பிப் 10, 2026 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : தொழிலதிபர் அனில் அம்பானியின் பணமோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை அமலாக்கத்துறை அமைத்துள்ளது.
அனில் திருபாய் அம்பானி குழுமம் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்குமாறு ஈ.டி.,க்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு, நிறுவனத்தின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள், சந்தேகத்துக்குரிய நிதி பரிவர்த்தனைகள், நிர்வாகிகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்.

