தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'டீசல் ஜெனரேட்டர்களில் எத்தனால் பயன்படுத்தலாம்'

 'டீசல் ஜெனரேட்டர்களில் எத்தனால் பயன்படுத்தலாம்'

 'டீசல் ஜெனரேட்டர்களில் எத்தனால் பயன்படுத்தலாம்'


ADDED : ஏப் 11, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக டீசல் ஜெனரேட்டர்களிலும் எத்தனாலை பயன்படுத்துவது அவசியம் என்று ஜி.இ.எம்.ஏ., எனும் தானிய எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பிரசாந்த் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்தியாவின் தற்போதைய எத்தனால் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1,800 கோடி லிட்டராக உள்ளது. பெட்ரோலில் கலக்கப்படுவதை தாண்டி, இந்த உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த புதிய தேவைகளை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது.

'டெலிகாம் டவர்'கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர்களை எத்தனால் பயன்பாட்டிற்கு மாற்றுவதன் வாயிலாக, ஆண்டுக்கு கூடுதலாக 1,300 முதல் 2,000 கோடி லிட்டர் எத்தனால் தேவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்டமாக, தற்போதுள்ள டீசல் ஜெனரேட்டர்களில் சிறிய மாற்றங்களை செய்து, எத்தனால் மற்றும் டீசல் இரண்டையும் பயன்படுத்தும் முறைக்கு மாறலாம். இதன் பின், மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 100 சதவீத எத்தனால் ஜெனரேட்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எத்தனால் வாயிலாக நாட்டின் டீசல் இறக்குமதி பெருமளவு குறைந்து, அன்னிய செலாவணி சேமிக்கப்படும். மேலும், மக்காச்சோளம், அரிசி மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைவதும் குறையும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us