UPDATED : மார் 15, 2026 01:53 AM
ADDED : மார் 15, 2026 01:34 AM

புதுடில்லி:நாட்டின் உரங்கள் கையிருப்பு 163 லட்சம் டன்னாக, அதாவது 26 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் உர மானியத்துக்காக கூடுதலாக 19,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
நாட்டின் உரங்கள் இருப்பு முந்தைய ஆண்டில் 128 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டு 163 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் திட்டமிடுதலே இதற்கு காரணம். இதனால் விவசாயத்துக்கு தேவையான உர இருப்பை உறுதி செய்திருக்கிறோம். நடப்பு கரீப் சீசனுக்கான உரங்கள் போதுமான அளவில் உள்ளன.
உர மானியத்துக்காக கூடுதலாக 19,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நாடு முழுதுமுள்ள விவசாயிகளுக்கு போதுமான உர வினியோகத்தை உறுதி செய்திருக்கிறோம்.

உர இருப்பு
2025
128 லட்சம் டன்
2026
163 லட்சம் டன்
26 சதவீதம்
யூரியா உற்பத்தி
2014 - -15ல்
225 லட்சம் டன்
2024 - -25ல்
306 லட்சம் டன்
