ADDED : ஜூலை 20, 2025 08:41 PM

நவீன வாழ்க்கையில் ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வாழ்வியல் செலவுகள் தவிர, சமூக ஊடகத்தில் மற்றவர்களை பார்த்து செலவு செய்வதும் அதிகரித்து உள்ளது. இத்தகைய செலவுகளை கட்டுப்படுத்தாமல் போனால், சேமிப்பும், முதலீடும் பாதிக்கப்படுவதோடு கடன் வலையிலும் சிக்கலாம்.
எனவே, வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். முதலீட்டு வழிகாட்டி என கருதப்படும் வாரன் பப்பே இதற்கு அருமையாக வழிகாட்டுகிறார். அவரது பார்வையில், பணத்தை வீணடிக்க கூடிய ஐந்து விதமான பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது:
புதிய கார்:
பளபளப்பான புதிய காரை வாங்கும் ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால், விலை அதிகமான புதிய காரை வாங்குவதை தவிர்க்க வேண்டும். வாங்கியவுடன் மதிப்பு குறையும் தேய்மானம் மிக்க பொருளை ஏன் அதிக விலைக்கு வாங்க வேண்டும். பழைய காரே போதுமானது.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டில் பலவித பயன்கள் இருந்தாலும், அதை கடன் பொறி என்கிறார் வாரென் பப்பே. கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகம். குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்தும் தன்மை பாதிப்பை ஏற்படுத்தலாம். கடன் வாங்காமலே இருந்தால் அதிகம் சேமிக்கலாம்.
சூதாட்டம்:
சூதாடம் அல்லது லாட்டரி போன்றவற்றை நம்பும் பழக்கம் இருந்தாலும் பாதகம் தான். இவை கடினமாக உழைக்க விடாமல், முதலீட்டில் ஆர்வம் கொள்ளாமல் இருக்கச்செய்யும். இவை ஈர்ப்பை ஏற்படுத்தினாலும், பழக்கமாக நிதி ஒழுக்கத்தை பாதித்து சிக்கலை ஏற்படுத்தும். ஜாக்பாட் எதிர்பாப்பு வாழ்க்கையை மாற்றாது.
பெரிய வீடு:
சொந்த வீடு அவசியம் தான். ஆனால், தேவைக்கேற்ற பெரிய வீடாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். பெரிய வீட்டிற்கான தொகை அதிகம் என்பதோடு பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளும் அதிகரிக்கும். எனவே வீண் பெருமைகாக தேவைக்கு அதிகமானதை விட பெரிய வீட்டை வாங்குவது ஏற்றது அல்ல.
கிரிப்டோ முதலீடு:
பல வகையான முதலீடு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிக பலனுக்கு ஆசைப்பட்டு சிக்கலான முதலீடு வாய்ப்புகளை நாடக்கூடாது. உங்களுக்கு புரியாத வர்த்தகத்தில் முதலீடு செய்யாதீர்கள் என்பது பாலபாடம். எனவே, கிரிட்போ போன்ற சிக்கலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.