ADDED : நவ 04, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், யூனிட் டிரஸ்டுகளில், நம் நாட்டின் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய 'செபி' அனுமதி அளித்துள்ளது. எனினும், இதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அன்னிய நிறுவனங்களின் நிகர சொத்துகளில், 25 சதவீதத்துக்கும் குறைவாக இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் மட்டுமே, நம் நாட்டு நிறுவனங்கள் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். வெளிநாட்டு பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக செபி தெரிவித்துள்ளது.

