ட்ரோன் தயாரிப்புக்கு கருடா ஏரோஸ்பேஸ் 'பெல்' ஒப்பந்தம்
ட்ரோன் தயாரிப்புக்கு கருடா ஏரோஸ்பேஸ் 'பெல்' ஒப்பந்தம்
ADDED : ஜன 15, 2026 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆளில்லா ட்ரோன்கள் தயாரிப்பது தொடர்பாக, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன், பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நம் நாட்டின் ராணுவம், மத்திய காவல் துறை மற்றும் துணை பாதுகாப்பு படையினருக்கு, ஆளில்லா ட்ரோன்கள் தயாரித்து வினியோகம் செய்வது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இத்திட்டத்தின் தலைமை பொறுப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், தொழில்நுட்ப பணிகளை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமும் கவனிக்க உள்ளன. நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில், பிற நாடுகளை சார்ந்திருக்காமல், உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும், சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.

