sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்

/

 ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்

 ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்

 ராணுவ சாதனங்களுக்கு பரிசோதனை மையங்கள்: விரைவில் அமைக்க அறிவுறுத்தல்


ADDED : நவ 27, 2025 12:02 AM

Google News

ADDED : நவ 27, 2025 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;தமிழகத்தில் அமைக்கப்படும் ஆளில்லா சிறிய விமானம் உள்ளிட்ட ராணுவ சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கும் மையங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, 'டிட்கோ' அதிகாரிகளை, ராணுவ அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி ஓசூரை உள்ளடக்கி ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில், வான்வெளி மற்றும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆளில்லா விமானம், ரேடார் உள்ளிட்ட ராணுவ சாதனங்களின் தரத்தை பரிசோதிக்கும், நான்கு பொது சோதனை மையங்களை, காஞ்சிபுரம், திருச்சியில், 'டிட்கோ' நிறுவனம் அமைக்கிறது.

இந்த சோதனை மையங்களின் தற்போதைய நிலை குறித்து, சென்னை, 'டிட்கோ' அலுவலகத்தில், ராணுவ துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், பணிகளை முடித்து, சோதனை மையங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us