UPDATED : மார் 09, 2026 03:15 AM
ADDED : மார் 09, 2026 03:12 AM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், பட்ஜெட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதியை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக 'கார்ப்பரேட் விவகாரங்கள், நீர்வளம்' உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிதி பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது மத்திய அரசின் தலைமை கணக்கு ஆலோசகர் வெளியிட்டு உள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாடுகள்
* கடைசி நேரத்தில், ஒதுக்கப்பட்ட நிதியை மொத்தமாக செலவு செய்யக் கூடாது என அனைத்து அமைச்சகத்துக்கும் உத்தரவு
* மார்ச் காலாண்டில், மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 33 சதவீதத்துக்கு மேல் செலவிடக் கூடாது
*கடைசி மாதமான மார்ச் மாதத்தில் மட்டும், 15 சதவீதத்துக்கு மேல் செலவு செய்ய அனுமதி இல்லை.
![]() |
நிபுணர்கள் கருத்து
“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால், அரசின் நிதிப் பற்றாக்குறை 4.50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அரசு நிர்ணயித்த 4.40 சதவீத இலக்கை அடைய வேண்டுமெனில், மார்ச் மாத செலவுகளை அரசு அதிரடியாகக் குறைக்க வேண்டியிருக்கும். நிதியை முழுமையாக செலவிடாத அமைச்சகங்களால், இலக்கை எட்ட முடியாமல் போகலாம். இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சிறு தொய்வை ஏற்படுத்தக்கூடும்,” என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


