
400
'டா பர் இந்தியா' நிறுவனம், தென் மாநிலங்களில் தனது முதல் ஆலையை தமிழகத்தில் அமைக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த ஆலையின் வாயிலாக 250க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு டூத் பேஸ்ட், கூந்தல் தைலம் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
5.79
இ ந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில் 5.79 சதவீதம் சரிந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு ஜனவரியில் 21,622 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஜனவரியில் 20,371 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் வரி உயர்த்தப்பட்டதால், அந்நாட்டுக்கான ஏற்றுமதி 45 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
75
நி றுவனங்களை கையகப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு 75 சதவீதமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முன்பு தெரிவிக்கப்பட்டிருந்த 70 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
இதுதொடர்பான இறுதி வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கையகப்படுத்தப்படும் மொத்த மதிப்பில் 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கலாம்.
மீதமுள்ள தொகை அந்த நிறுவனத்தின் சொந்த நிதியாதாரமாக இருக்க வேண்டும். மேலும், கடன் மற்றும் பங்கு விகிதம் 3:1 என்பதற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

