
28,748
நாடு முழுதும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் வரை மத்திய அரசு அளித்த கோடி ரூபாய் இது.
பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் எலெக்ட்ரானிக்ஸ், பார்மா உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த 836 நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக 2.16 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதனால், 14.39 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
27,000
அசாமில் கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள டாடாவின் புதிய ஆலையில், குவால்காமின் ஆட்டோமோட்டிவ் மாட்யூல்கள் தயாரிக்க இருப்பதாக குவால்காம் டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. இதற்காக, டாடா எலெக்ட்ரானிக்ஸ் உடன் குவால்காம் கைகோர்த்துள்ளது.
இங்கு இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப, டிஜிட்டல் காக்பிட், இன்போடெயின்மென்ட் உள்ளிட்ட மாட்யூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.
64,52,000
கடந்த நிதியாண்டில் வருவாய் அடிப்படையில், முதல்முறையாக அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தை, அமேஸான் முந்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில், அமேஸானின் ஆன்லைன் வர்த்தகம் மட்டுமின்றி, விளம்பர வருமானம் கணிசமாக அதிகரித்திருந்தன. வால்மார்ட் கிட்டத்தட்ட 64.18 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், அமேஸான் 64.52 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

