மும்பை ரயில்வே நில ஏலம் 'ஓபராய் ரியாலிடி' கைப்பற்றியது
மும்பை ரயில்வே நில ஏலம் 'ஓபராய் ரியாலிடி' கைப்பற்றியது
ADDED : பிப் 06, 2026 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் உள்ள, ரயில்வே துறைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான ஏலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'ஓபராய் ரியாலிடி' வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, அடுத்த 99 ஆண்டுகளுக்கு இந்த நிலம் ஓபராய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆர்.எல்.டி.ஏ., எனும் ரயில்வே நில மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஏலத்தில், அதிக பட்சமாக 5,400 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டதை அடுத்து, இந்த ஒப்பந்தம் ஓபராய்க்கு வழங்கப்பட உள்ளது. இவ்விடத்தில் மொத்தம் 19.50 லட்சம் சதுரடி பரப்புக்கு கட்டடங்களை கட்ட முடியும்.

