ADDED : அக் 15, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும், பிரான்சை சேர்ந்த ஓ.பி., மொபிலிட்டி நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,700 முதல் 2,700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், கார்களுக்கான வெளிப்புற உபகரணங்கள், எரிவாயு அமைப்புகள், லைட் அமைப்புகள் உள்ளிட்ட வற்றை தயாரித்து வினியோகிக்கிறது.
இந்நிலையில், கிட்டத்தட்ட 2,700 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக தமிழகத்தின் சென்னை, ஹரியானாவின் மனேசர், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத், குஜராத்தின் ஹன்சல்பூர், ஹரியானாவின் கார்கோடா ஆகிய பகுதிகளில் புதிய ஆலைகளை அமைக்க உள்ளது.