ADDED : ஜன 25, 2026 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான பெப்ஸிகோ, இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியாக சவிதா பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பெப்ஸிகோ இந்தியா நிறுவனத்தின் சி.எப்.ஓ.,வாக பணியாற்றி வரும் கவுசிக் மித்ரா, வரும் ஏப்.,15ம் தேதியுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, புதிய தலைமை நிதி அதிகாரியாக சவிதா பாலச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் நிதி தொடர்பான விவகாரங்களை கையாள்வார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சவிதா பாலச்சந்திரன் பணியாற்றி உள்ளார்.

