ADDED : அக் 07, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில், பெட்ரோல் வாகனங்கள் விலையுடன், மின்சார வாகனங்களின் விலை சமம் ஆகிவிடும். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிம எரிபொருளை நம் நாடு சார்ந்திருப்பது, பொருளாதார சுமை மட்டுமின்றி, சுற்றுச்சூழல் ஆபத்தாகவும் உள்ளது.
ஆண்டுக்கு, 22 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறோம். துாய எரிபொருளுக்கு விரைவாக மாறினால், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு மொத்தம் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
- நிதின் கட்கரி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்