ADDED : பிப் 27, 2026 01:59 AM

ஐ போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது 'ஆப்பிள் பே' வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுடன் அந்நிறுவனம் பேசி வருகிறது. இவை தவிர, மாஸ்டர் கார்டு, விசா ஆகிய நிறுவனங்களுடனும் பேச்சு தொடர்கிறது. எப்படி இருப்பினும், இவ்வாண்டின் மத்தியில் இவ்வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் ஆப்பிள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆப்பிள் பே வசதி இந்தியாவில் அறிமுகமானால், யு.பி.ஐ., கார்டு அடிப்படையிலான பணம் செலுத்தும் வசதி, ஆகியவையும் இதனுடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய ஸ்மார்ட் மொபைல் சந்தையில் 10 சதவீத பங்கு வகிக்கும் ஆப்பிள், இவ்வசதி வாயிலாக கூடுதல் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறது.

