sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 கார் அலாய் சக்கரங்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆலை

/

 கார் அலாய் சக்கரங்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆலை

 கார் அலாய் சக்கரங்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆலை

 கார் அலாய் சக்கரங்களுக்காக மஹாராஷ்டிராவில் ஆலை


ADDED : பிப் 07, 2026 01:54 AM

Google News

ADDED : பிப் 07, 2026 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும், 'யூனோ மிண்டா' நிறுவனம், மஹாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில், 764 கோடி ரூபாய் முதலீட்டில், பயணியர் கார்களுக்கான, இரண்டு உலோகங்களின் கலவையான அலாய் சக்கரங்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.

இது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் படிப்படியாக கட்டமைக்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில், ஆண்டுக்கு 18 லட்சம் அலாய் சக்கரங்களை உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மெஹ்ரா கூறியதாவது:

புதிய ஜி.எஸ்.டி., வாகனத் துறைக்கு ஆதரவான அரசு கொள்கைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவை, வாகன தேவையை அதிகரிக்கிறது. யூனோ மிண்டா நிறுவனம், நவீன உற்பத்தி, உள்நாட்டு மயமாக்கல், உற்பத்தி விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

வாகன பாதுகாப்பு, பிரீமியம் மற்றும் மின்சார கார்களின் வாயிலாக எங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us