sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

/

 சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

 சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

 சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

1


ADDED : ஜன 24, 2026 02:47 AM

Google News

ADDED : ஜன 24, 2026 02:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக 'பி.எம்., ஸ்வநிதி' கிரெடிட் கார்டை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.

ஒரு லட்சம் பயனாளிகளுக்கான கடனுதவிகளை வழங்கி, அவர் பேசியதாவது:

பிரதமரின் ஸ்வநிதி கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, நாடு தழுவிய அளவில் ஏழைகளுக்கான நலத்திட்டம் துவங்குகிறது.

இதன் வாயிலாக, சாலையோர வியாபாரிகள், நடைபாதைகளில் தொழில் செய்வோர் பயனடைவர். இதுவரை சாலையோர வியாபாரிகள் தொழிலுக்காக சில நுாறு ரூபாய்களைக்கூட அதிக வட்டியில் கடனாக வாங்கி வந்தனர்.



இந்நிலையை இந்த கிரெடிட் கார்டு, மாற்றி அமைக்கும். முதன்முறையாக நாடெங்கும் லட்சக்கணக்கான சாலையோர வணிகர்கள் வங்கி கடன்களை பெற்று, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

பி .எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டுகள் கேரளாவில் 10,000 பேருக்கு வழங்கப்படுகின்றன. இதில், 600 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பயனாளிகள். முன்பெல்லாம் வசதி படைத்தவர்களுக்கே கிரெடிட் கார்டு கிடைக்கும். தற்போது, சாலையோர வர்த்தகர்களுக்கும் அது சாத்தியமாகியிருக்கிறது.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

சிறப்பு என்ன?
'பி.எம்., 'ஸ்வநிதி' திட்டம், கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வணிகர்களுக்காக, கடந்த 2020 ஜூனில் துவங்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக, 5 ஆண்டு ஆயுட்காலத்துடன் கூடிய கிரெடிட் கார்டு அறிமுகமாகிறது. யு.பி.ஐ., உடன் இணைந்த இந்த கார்டை பயன்படுத்தி, 30,000 ரூபாய் வரை சுழல் நிதிக்கடன் பெறலாம். அக்கடனுக்கு 20- - 50 நாட்கள் வரை வட்டி வசூலிக்கப் படாது.








      Dinamalar
      Follow us