ADDED : ஜன 14, 2026 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'சால்டரிங்' செய்யப் பயன்படுத்தப்படும் 'பிளக்ஸ் கோர்டு சால்டர்' ஒயருக்கு பி.ஐ.எஸ்., எனும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு விதித்திருந்த கட்டுப்பாட்டு ஆணை, ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இதுகுறித்து கூறுகையில், 'தேவை மற்றும் பொதுநலன் கருதி, பிளக்ஸ் கோர்டு சால்டரிங் ஒயருக்கு 2023ல் விதிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆணை விலக்கப்படுகிறது. பி.ஐ.எஸ்., அமைப்புடன் ஆலோசனை செய்த பிறகு ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
ஈயத்தை உலோகத்துடன் ஒட்டவைக்க தனியே ரசாயனக் களிம்பு தேவையின்றி, கம்பிக்குள்ளேயே பிளக்ஸ் கலவையை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒயர், பிளக்ஸ் கோர்டு சால்டர் எனப்படுகிறது.

