ரூபாயின் மதிப்பு உயர்வால் அரிசி ஏற்றுமதி விலை விர்ர்
ரூபாயின் மதிப்பு உயர்வால் அரிசி ஏற்றுமதி விலை விர்ர்
ADDED : பிப் 07, 2026 01:47 AM

புதுடில்லி: ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், தேவை சற்றே அதிகரித்துள்ளதாலும், இந்திய அரிசி ஏற்றுமதி விலை இந்த வாரம் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐந்து சதவீதம் உடைந்த புழுங்கல் அரிசி விலை, இந்த வாரம் டன்னுக்கு 353 - 359 டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 31,700 - 32,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 351 - 356 டாலராக, அதாவது 31,600 - 32,000 ரூபாயாக இருந்தது. கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதே, அரிசி ஏற்றுமதி விலையை உயர்த்த முக்கிய காரணமாகும்.
தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளின் ஐந்து சதவீத உடைந்த அரிசி விலை முறையே டன்னுக்கு 35,100 - 36,000 ரூபாய் மற்றும் 32,400 - 33,030 ரூபாயாக தொடர்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

