UPDATED : பிப் 02, 2026 04:35 AM
ADDED : பிப் 02, 2026 02:18 AM

க ன்டெய்னர் தயாரிப்புக்கான புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. உலகளவில் போட்டியிடும் அளவுக்கு, நம் நாட்டின் கன்டெய்னர் தயாரிப்பு சூழலை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில், 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு உபகரணங்கள் மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். அதன் வாயிலாக, கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில், 20 புதிய நீர்வழி தடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். உள்நாட்டு நீர்வழி தடத்தில் செல்லும் கப்பல்களுக்காக வாரணாசியிலும், பாட்னாவிலும் பழுதுபார்ப்பு மையங்கள் அமைக்கப்படும்.

