UPDATED : பிப் 02, 2026 04:40 AM
ADDED : பிப் 02, 2026 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆறு ஆண்டுகள் தாமதமாக, வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு; 2027 பிப்., 1 முதல் மக்கள் தொகை, ஜாதி வாரி கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
நாடு முழுதும், டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வாயிலாக நடைபெறும் கணக்கெடுப்பில், 30 லட்சம் களப்பணியாளர்கள், 1.8 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

