sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஏப் 18, 2025 12:09 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னிய முதலீட்டாளர்கள் ஆர்வம்


தொடர்ந்து நான்காவது நாளாக நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் நேற்றும் ஏற்றம் கண்டன. நேற்று முன்தினம் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, நேற்று காலை வர்த்தக நேர துவக்கத்தில், இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. எனினும், இதன் பிறகு பணவீக்கம் குறைந்துள்ளது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு போன்ற உள்நாட்டு காரணிகளால், சந்தை குறியீடுகள் உயரத் துவங்கி, வர்த்தக நேர முடிவில், கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தன. சென்செக்ஸ் மீண்டும் 78,000 புள்ளிகளை கடந்தது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 6.37 சதவீதமும்; நிப்டி 6.48 சதவீதமும் உயர்ந்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா - ஜப்பான் இடையேயான விவாதம் வெற்றிகரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில், அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தனர். வங்கித்துறை குறிப்பாக, தனியார் வங்கி பங்குகளே அதிகளவு வாங்கப்பட்டன.

புனித வெள்ளியை முன்னிட்டு, இன்று பங்குச் சந்தைகள் இயங்காது.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 4,668 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.94 சதவீதம் அதிகரித்து, 66.47 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா உயர்ந்து, 85.38 ரூபாயாக இருந்தது.






      Dinamalar
      Follow us