ADDED : ஜன 13, 2026 01:09 AM

புதுடில்லி: நாட்டின் சர்க்கரை தொழில் துறை, மற்றொரு நெருக்கடியை நோக்கி பயணித்து வருவதாக, தரகு நிறுவனமான எலாரா கேப்பிட்டல் எச்சரித்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
அரசின் கொள்கை ரீதியான தலையீடு இல்லாததால், சர்க்கரை துறை மற்றொரு நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது. இதனால், நாட்டின் சர்க்கரை அடிப்படையிலான எத்தனால் துறை, முழு அளவிலான கொள்முதலை எதிர்பார்க்கிறது. கரும்பு பயிரிடும் பரப்பு, சர்க்கரை உற்பத்தி மற்றும் விற்பனை சீராக இருக்கும் நிலையில், கரும்புக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.
இதனால், மக்கா சோளம் மற்றும் அரிசியை பயன்படுத்தி செய்யப்படும் எத்தனால் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவில் கரும்பு விலை உயர்வுக்கு ஏற்ப, எத்தனால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை.
இதனால், சர்க்கரை அடிப்படையிலான எத்தனால் பங்களிப்பு குறையக்கூடும். மக்கா சோளம் விலை குறைவது, தானியம் அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியையும், வருவாயையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

