நிறுவன சமூக பொறுப்பு பணி நிதி பெற்றதில் தமிழகம் 3ம் இடம்
நிறுவன சமூக பொறுப்பு பணி நிதி பெற்றதில் தமிழகம் 3ம் இடம்
ADDED : ஏப் 30, 2025 11:43 PM

புதுடில்லி:பெருநிறுவன சமூக பொறுப்பு சட்டத்தின் கீழ் செலவிடப்படும் தொகைகளில் 60 சதவீதத்தை மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் பெற்றுள்ளன.
*கடந்த 2014 ஏப்ரலில் சி.எஸ்.ஆர்., எனப்படும் பெருநிறுவன சமூக பொறுப்பு சட்டம் அமலுக்கு வந்தது.
*நிறுவனங்கள், தங்கள் நிகர லாபத்தில் இரண்டு சதவீதத்தை, சி.எஸ்.ஆர்., திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
* 500 கோடி அல்லது அதற்கு மேல் நிகர மதிப்பு; அல்லது 1,000 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய்; அல்லது 5 கோடி மற்றும் அதற்கு மேல் நிகர லாபம் கொண்ட நிறுவனங்கள், கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில், இரண்டு சதவீதத்தை செலவிட வேண்டும்.
செலவிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை
2022 - 23: 1,297
2023 - 24: 1,394
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செலவு
• 2022 - 23: 15,524
• 2023 - 24: 17,967 (16% உயர்வு)
சி.எஸ்.ஆர்., செலவில் டாப் 10 நிறுவனங்கள்
(2023-2024 நிதியாண்டு)
நிறுவனத்தின் பெயர் தொகை (கோடி/ரூபாய்)
1. எச்.டி.எப்.சி., வங்கி 945.31
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 900
3. டி.சி.எஸ்., 827
4. ஓ.என்.ஜி.சி., 634.57
5. டாடா ஸ்டீல் 580.02
6. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 518.87
7. இந்தியன் ஆயில் 457.71
8. இன்போசிஸ் 455.67
9. ஐ.டி.சி., 404.05
10. பவர் கிரிட் கார்ப்பரேஷன் 330.48
சி,எஸ்.ஆர்., நிதி பெற்ற டாப் 10 மாநிலங்கள்
மாநிலங்கள் தொகை
1. மஹாராஷ்டிரா 266.14 கோடி ரூபாய்
2. ராஜஸ்தான் 242.58
3. தமிழ்நாடு 215.13
4. குஜராத் 210.49
5. தெலுங்கானா 136
6. டில்லி 120.85
7. ஒடிசா 120.74
8. உத்தர பிரதேசம் 118.24
9. சத்தீஸ்கர் 118
10. ஹரியானா 112.23
ஆதாரம்: 'பிரைம்இன்போபேஸ்.காம்'