sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.6,000 கோடிக்கு விற்பனை 'டான்பாமா' தலைவர் தகவல்

/

ரூ.6,000 கோடிக்கு விற்பனை 'டான்பாமா' தலைவர் தகவல்

ரூ.6,000 கோடிக்கு விற்பனை 'டான்பாமா' தலைவர் தகவல்

ரூ.6,000 கோடிக்கு விற்பனை 'டான்பாமா' தலைவர் தகவல்


ADDED : அக் 20, 2025 10:35 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தீபாவளியை முன்னிட்டு 6,000 கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன; 4,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.

ஏற்கனவே பெய்த மழை, அதிகாரிகள் ஆய்வு உட்பட பல்வேறு காரணங்களால், இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது. சரவெடி தயாரிக்கக்கூடாது, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், தேவையான ரகங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை.

அதே சமயத்தில் மக்கள் விரும்பும் வகையில், புது ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

'இந்த ஆண்டு தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் முழுமையாக விற்பனையாகி, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது' என, தமிழ்நாடு கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கமான டான்பாமா தலைவர் கணேசன் கூறினார்.






      Dinamalar
      Follow us