sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ அரசின் 50% முதலீட்டு மானியம் தேவை ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

/

ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ அரசின் 50% முதலீட்டு மானியம் தேவை ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ அரசின் 50% முதலீட்டு மானியம் தேவை ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ அரசின் 50% முதலீட்டு மானியம் தேவை ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 06, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ஜவுளி தொழிலில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களை நிறுவ, 50 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டு மென, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

பிரிட்டனுடன் உருவாகியுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் உருவாகும் வர்த்தக ஒப்பந்தத்தால், அந்நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியும் அதிகரிக்கும்.உலக அளவிலான வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஜவுளி தொழில் துறையினர், சங்கடங்களை கடந்து சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அத்தியாவசியமான உதவிகள் வேண்டும் என்பதே, நாடு முழுதும் உள்ள தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.புதிய தொழில்நுட்பத்தை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தும் வசதி இந்தியாவில் மிக குறைவு. அதிலும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான 'டப்' திட்டமும் நிறுத்தப்பட்டது. கொரோனாவுக்கு பின், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவுவதும் நின்றுபோனது.

போட்டி நாடுகளில், ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன; இந்தியாவில் நவீன ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் வந்தால் மட்டுமே, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எனவே, ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவ, 50 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கி மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us