ADDED : பிப் 11, 2026 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை, 2025 அக்., - டிச., காலாண்டில் 6.70 சதவீதமாக குறைந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின் விபரம்:
கடந்த ஆண்டு அக்., முதல் டிச., வரையிலான காலாண்டில், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 6.70 சதவீதமாக சற்று குறைந்தது.
2025 ஜூலை முதல் செப்., வரையிலான முந்தைய காலாண்டில், இது 6.90 சதவீதமாக இருந்தது. 2025 அக்., - டிச., காலாண்டில் கிராமப்புறங்களில், வேலைவாய்ப்பின்மை 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது.

