sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 'ஐரோப்பிய பேமென்ட் முறையுடன் விரைவில் யு.பி.ஐ., இணைக்கப்படும்'

/

 'ஐரோப்பிய பேமென்ட் முறையுடன் விரைவில் யு.பி.ஐ., இணைக்கப்படும்'

 'ஐரோப்பிய பேமென்ட் முறையுடன் விரைவில் யு.பி.ஐ., இணைக்கப்படும்'

 'ஐரோப்பிய பேமென்ட் முறையுடன் விரைவில் யு.பி.ஐ., இணைக்கப்படும்'


ADDED : நவ 23, 2025 12:15 AM

Google News

ADDED : நவ 23, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: நம் நாட்டின் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்பான யு.பி.ஐ., சேவையை ஐரோப்பிய நாடுகளின் டிப்ஸ் எனும் 'டார்கெட் இன்ஸ்டன்ட் பேமென்ட் செட்டில்மென்ட்' நடைமுறையுடன் இணைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

விரைவில் இவை இரண்டும் இணைக்கப்படும் என்றும், எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை சேவையை நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் ஆர்.பி.ஐ., கூறியுள்ளது.

யு.பி.ஐ., - டிப்ஸ் இணைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கியும் என்.பி.சி.ஐ., இன்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனமும், ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீரான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு பின், இதை செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்க தற்போது சம்மதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இது நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பில் உள்ள பயனர்களும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மிக வேகமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஜி - 20 நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us