/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (21)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (21)
ADDED : அக் 21, 2024 08:33 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
இட்லி, தோசை மாவு வரி நீக்க வேண்டும்
மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்விக்கான மற்ற உபகரணங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 மற்றும் 28 சதவீத உயர் வரிவிகிதம் 12 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அதிகபட்ச வரியே 12 சதவீதம்தான் இருக்க வேண்டும்.
பூஜைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்து, முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் இன்றியமையா பொருட்கள், முழு வரிவிலக்கின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படவேண்டும்.
அரிசி, பருப்பு, கோதுமை, வெல்லம், கருப்பட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு எத்தனை கிலோ 'பேக்கிங்' ஆக இருந்தாலும், வரி விதிக்கக்கூடாது. இட்லி மாவு, தோசை மாவு, ரஸ்க் போன்ற பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மாதம் தோறும் 11 மற்றும் 20ம் தேதி ஜி.எஸ்.டி. படிவங்களைத் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை, ஜி.எஸ்.டி.ஆர்., 1க்கு 15ம் தேதியாகவும், ஜி.எஸ்.டி.ஆர்., 3பிக்கு 25ம் தேதியாகவும் மாற்ற வேண்டும்.
பிராந்திய மொழிக்கு அறிமுகம் இல்லாதவர்களை, ஜி.எஸ்.டி., அலுவலகங்களில் பணியமர்த்தக் கூடாது. வரி செலுத்துவோர் தங்கள் குறைகள் அல்லது விளக்கங்களைக் கேட்டுப் பெறுவது மிகச் சிரமமாக உள்ளது.
- டி.கிருபாகரன், தலைவர், திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம்
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in