தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பங்குகளை தரம் பிரிக்கும் 'ஆம்பி' இடம் மாறும் 30 நிறுவனங்கள்

 பங்குகளை தரம் பிரிக்கும் 'ஆம்பி' இடம் மாறும் 30 நிறுவனங்கள்

 பங்குகளை தரம் பிரிக்கும் 'ஆம்பி' இடம் மாறும் 30 நிறுவனங்கள்


ADDED : மே 08, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒ வ்வொரு ஆண்டும், 'ஆம்பி' அமைப்பு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், பங்குகளின் கடந்த 6 மாத சராசரி சந்தை மதிப்பை வைத்து, 'லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப்' பங்குகள் என தரம் பிரிக்கும். இந்த நடவடிக்கையின்படி, இம்முறை 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம் மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

'நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் ஆல்டர்நேட்டிவ் அண்டு குவாண்டிடேட்டிவ்' ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, வரவிருக்கும் மறுவகைப்படுத்தலில் 'லார்ஜ்கேப்' பிரிவிற்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு கிட்டதட்ட 1.06 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2026 ஜனவரியில் நடந்த முந்தைய 1.05 லட்சம் கோடி ரூபாயை விட சற்றே அதிகமாகும். அதேநேரத்தில், 'மிட்கேப்' பிரிவிற்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு 34,800 கோடி ரூபாயில் இருந்து 32,300 கோடி ரூபாயாக குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்புகள், கடந்த மே 5ம் தேதியிலான சந்தை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டவை. புதிய பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் மாற வாய்ப்புள்ள சில பங்குகள் மிட்கேப்பில் இருந்து லார்ஜ்கேப் 1. பி.எஸ்.இ., 2. ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் 3. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லார்ஜ்கேப்பில் இருந்து மிட்கேப் 1. இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி 2. லோதா டெவலப்பர்ஸ், 3. மேக்ஸ் ஹெல்த்கேர் ஸ்மால்கேப்பில் இருந்து மிட்கேப் 1. ஹிந்துஸ்தான் காப்பர் 2. என்.எல்.சி., 3. ஏ.ஐ.ஏ., இன்ஜினியரிங் 4. அஜந்தா பார்மா 5. டெலிவரி மிட்கேப்பில் இருந்து ஸ்மால்கேப் 1. கேய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா 2. எஸ்.ஜே.வி.என்., 3. குளோபல் ஹெல்த் 4. பிசிக்ஸ்வாலா



பங்குகளின் விலை குறைய வாய்ப்பு? இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியதாவது, பண்டு மேலாளர்கள் தாங்கள் வைத்துள்ள முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப, ஆம்பியின் புதிய பட்டியலை பார்த்து பங்குகளை வாங்குவார்கள் அல்லது விற்பார்கள். ஒரு பங்கு பெரிய பிரிவிலிருந்து நடுத்தர பிரிவிற்கு மாறும்போது, சம்பந்தப்பட்ட பங்குகளில் குறுகிய கால அதிர்வுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் விற்பனை அழுத்தம் அதிகரித்து பங்குகளின் விலை குறையலாம். எனவே, இப்பட்டியலில் இடம்பெறும் பங்குகளின் வர்த்தக அளவை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us