கூடுதல் லாபத்தை ஈட்டி தரும் கூட்டு முதலீட்டு உத்தி
கூடுதல் லாபத்தை ஈட்டி தரும் கூட்டு முதலீட்டு உத்தி
UPDATED : மே 25, 2026 02:09 AM
ADDED : மே 25, 2026 02:01 AM

இந்திய பங்குச்சந்தையில் குறியீடுகளை அடிப்படையாக கொண்டு முதலீடு செய்யும் 'பேசிவ் முதலீட்டு முறை' தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தையின் ஒட்டுமொத்த நகர்வை பிரதிபலிக்கும் 'நிப்டி 500' குறியீடு, பரவலான முதலீட்டிற்கு எளிமையான தேர்வாக பார்க்கப்பட்டாலும், அதில் உள்ள சில கட்டமைப்பு பலவீனங்கள் நீண்ட கால லாபத்தை குறைத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
![]() |
இந்த ஆய்வானது, கடந்த 20 ஆண்டுகால சந்தை தரவுகளில், முதலீட்டாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய சராசரி வருமானத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒற்றை நிப்டி 500 குறியீட்டிற்கு பதிலாக, 'நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி மிட்கேப் 150 மற்றும் நிப்டி ஸ்மால்கேப் 250' ஆகிய நான்கு வெவ்வேறு குறியீடுகளில் சமமாக பிரித்து முதலீடு செய்த கூட்டு உத்தியானது, கூடுதல் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது தெரியவந்துள்ளது.

