ADDED : ஏப் 20, 2026 01:55 AM

'புரூக்பீல்டு' நிறுவனத்தின் ஆதரவு பெற்ற 'அவாடா எலக்ட்ரோ' நிறுவனம் உட்பட, 'சோனாசெலக்ஷன் இந்தியா' மற்றும் சென்னையைச் சேர்ந்த 'கிராண்டு ஹவுசிங்' ஆகிய மூன்று நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் அனுமதி பெற்றுள்ளன.
இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டின் வாயிலாக, சூரிய சக்தி உபகரணங்கள் தயாரிக்கும் 'அவாடா எலக்ட்ரோ' 9,000 - 10,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும், விரிவுபடுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜவுளி துறையைச் சேர்ந்த 'சோனாசெலக்ஷன் இந்தியா' கடனை அடைக்கவும் புதிய இயந்திரங்கள் வாங்கவும் 1.43 கோடி புதிய பங்குகளை வெளியிடுகிறது.
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, சென்னையின் 'கிராண்டு ஹவுசிங்' நிறுவனம் 3.55 கோடி பங்குகளை முழுமையாக ஓ.எப்.எஸ்., முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
