sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

போரக்ஸ்: தொடரும் ரூபாய் மீதான அழுத்தத்தால் சரிவு

/

போரக்ஸ்: தொடரும் ரூபாய் மீதான அழுத்தத்தால் சரிவு

போரக்ஸ்: தொடரும் ரூபாய் மீதான அழுத்தத்தால் சரிவு

போரக்ஸ்: தொடரும் ரூபாய் மீதான அழுத்தத்தால் சரிவு


UPDATED : செப் 12, 2025 10:41 AM

ADDED : செப் 12, 2025 01:33 AM

Google News

UPDATED : செப் 12, 2025 10:41 AM ADDED : செப் 12, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.45 ரூபாய் என்ற புதிய சரிவை எட்டியுள்ளது. இது கடந்த வாரத்தில் இருந்த 88.36 என்ற உச்சத்தை முறியடித்துள்ளது.

புதிய துாண்டுதல் இல்லாமை: இந்தச் சரிவுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட பெரிய காரணமும் இல்லாவிட்டாலும், ஏற்கனவே ரூபாய் மீதுள்ள அழுத்தமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க வரிகள்: அமெரிக்காவின் வரிகள், இந்திய ஏற்றுமதியை வெகுவாகப் பாதித்து வருகின்றன.

அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்: இந்த ஆண்டு இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகள் மற்றும் கடன் சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 1.30 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர். இது ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

ஒரு நல்ல செய்தி


அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு நல்ல செய்தி பரவி வருகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அடுத்த வாரம் இந்தியா வர உள்ளனர்.

கிட்டத்தட்ட 35,200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கடற்படை ரோந்து விமானங்களை விற்பது குறித்து, அவர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மீண்டும் பேசுபொருளானது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மீண்டும் வலுப்பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரசியல்


பெடரல் ரிசர்வ்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்த ஸ்டீபன் மிரான் என்பவர், பெடரல் ரிசர்வ் குழுவில் இணைய உள்ளார். இது அங்குள்ள முதலீட்டாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது.

உற்பத்தியாளர் விலை சரிவு : ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் உற்பத்தியாளர் விலை 0.10 சதவீதம் சரிந்துள்ளது. இந்தச் சரிவு, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாய்க்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ளது.

இனி வரும் காலம்

வரும் நாட்களில் அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்த தரவுகள் வெளியாக உள்ளன. இந்தத் தரவுகள் டாலர் மதிப்பை மேலும் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ரூபாயின் மதிப்பு 87.90 முதல் 88.60 ரூபாய் என்ற வரம்பிற்குள் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us