ADDED : ஏப் 20, 2026 02:14 AM

அ நிறம் | அளவு
'ஏ.யூ., ஸ்மால் பைனான்ஸ்' வங்கி மற்றும் 'செக்' நிறுவனம் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக எல்.இ.டி., வசதியுடன் கூடிய புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன.
பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் 'டாப்' செய்யும் போது, அதிலிருந்து வரும் என்.எப்.சி., சிக்னல் வாயிலாகவே கார்டில் உள்ள எல்.இ.டி., ஒளிரும். இதற்கு தனியாக பேட்டரி தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்பவர்களுக்கு, ஆண்டு சந்தாவான 499 ரூபாய் ரத்து என்றும், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு, முதல்முறை கட்டணம் 999 ரூபாய் முற்றிலும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கார்டுக்கு, செக் செயலி வாயிலாக, வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
