தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கச்சா எண்ணெய் சார்ந்த பங்குகளில் கவனம் தேவை

 கச்சா எண்ணெய் சார்ந்த பங்குகளில் கவனம் தேவை

 கச்சா எண்ணெய் சார்ந்த பங்குகளில் கவனம் தேவை


ADDED : ஏப் 02, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பொறுத்தவரை கிட்டத்தட்ட 85 சதவீதம் இறக்குமதியிலிருந்து தான் கிடைக்கிறது.

இதில் பெரும்பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால், அப்பகுதியில் நிலவும் பதற்றம், இந்திய பொருளாதாரத்துக்கும் பங்குச்சந்தைக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், போர் முடிந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கச்சா எண்ணெய் சார்ந்திருக்கும் நிறுவன பங்குகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குறிப்பாக, பெயின்ட், டயர் மற்றும் லுாப்ரிகன்ட் நிறுவன பங்குகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்துள்ளார்.

போர் முடிந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது

கவனிக்க வேண்டியவை
1 கப்பல் காப்பீடு 0.25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது
2 நாள் ஒன்றுக்கு 100 கப்பல்கள் சென்ற இடத்தில், 8 கப்பல்கள் மட்டுமே செல்கின்றன
3 பிரென்ட் கச்சா எண்ணெய் விலையைவிட, நிஜமான வினியோக விலை 14 டாலர் அதிகமாக உள்ளது
4 அவசரகால இருப்பு ஏப்ரல் பாதியில் தீர வாய்ப்புள்ளதால், நாளொன்றுக்கு ஒரு கோடி பேரல்கள் வரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us