sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 துளிகள்

/

 துளிகள்

 துளிகள்

 துளிகள்


UPDATED : ஜன 07, 2026 01:20 AM

ADDED : ஜன 07, 2026 01:17 AM

Google News

UPDATED : ஜன 07, 2026 01:20 AM ADDED : ஜன 07, 2026 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதானி என்டர்பிரைசஸ் என்.சி.டி.,


'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், தனது கடன் பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, வெறும் 45 நிமிடங்களில் 1,000 கோடி ரூபாயை திரட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிறுவன கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 8.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்றும் நேற்று துவங்கி, வரும் 19ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விற்பனை துவங்கிய 10 நிமிடங்களிலேயே முதலில் அறிவிக்கப்பட்ட 500 கோடி ரூபாய் இலக்கு முடிந்த நிலையில், மீதமுள்ள தொகையும் 45 நிமிடங்களில் திரட்டப்பட்டது.

எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு ரூ.12,500 கோடிக்கு ஐ.பி.ஓ.,



Image 1518178


'எஸ். பி.ஐ., மியூச்சுவல் பண்டு' நிறுவனம், நடப்பாண்டில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'அமுண்டி' நிறுவனமும் தங்கள் வசம் உள்ள 10 சதவீத பங்குகளை ஐ.பி.ஓ., வாயிலாக விற்பனை செய்து, கிட்டத்தட்ட 12,500 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. ஐ.பி.ஓ., வேலைகளை கவனிக்க 9 மெர்ச்சன்ட் வங்கிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே முறை மட்டும் பிரீமியம் எல்.ஐ.சி.,யின் ஜீவன் உத்சவ்


Image 1518179


எல். ஐ.சி., நிறுவனம் தனது பிரபலமான 'ஜீவன் உத்சவ்' திட்டத்தில், ஒரே முறை மட்டும் பிரீமியம் செலுத்தும் புதிய வசதியை வரும் ஜனவரி 12, முதல் அறிமுகப்படுத்துகிறது.

பாலிசி எடுக்கும்போது மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது என்றும் பாலிசிதாரருக்கு முழு ஆயுள் காப்பீட்டுடன் வருமானமும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிரீமியம் செலுத்திய பின், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் ஆயுள் முழுதும் அடிப்படை காப்பீட்டு தொகையில் 10 சதவீதம் வருமானமாக கிடைக்கும் என்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால், இந்த காப்பீட்டின் பலன் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us