ADDED : ஜன 31, 2026 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கடந்த ஜனவரி 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 709.413 பில்லியன் டாலராக, அதாவது 64.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு 63.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 2௩ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்க கையிருப்பு 51,300 கோடி ரூபாய் உயர்ந்து 11.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

