உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 23, 2026 02:44 AM

அ நிறம் | அளவு
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 92.20 டாலராக உயர்ந்ததால், இந்தியாவில் 2036ம் ஆண்டு முதிர்வு கொண்ட கடன் பத்திர வட்டி விகிதம் 6.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தும். அத்துடன், அமெரிக்க கடன் பத்திர வட்டி விகிதம் 4.63 சதவீதமாக உயர்ந்ததால் வளரும் நாடுகளின் சந்தைகளில் இருந்து சர்வதேச முதலீடுகள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி நடவடிக்கைகள் வாயிலாக கிடைத்த 20.72 பில்லியன் டாலர் நிதியும், பொதுத்துறை வங்கிகளின் கடன் பத்திர கொள்முதலும் சந்தையை பெரும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியுள்ளன.
