ADDED : செப் 14, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ந்தியாவைச் சேர்ந்த முதலீட்டு தளமான க்ரோ, வரும் வாரத்தில் புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட க்ரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான பில்லியன் பிரையன்ஸ் கேரேஜ் வெஞ்சர்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 7,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது. வரும் வாரத்தில் ரகசிய முறையில் விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.