ADDED : நவ 19, 2025 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ ங்களுரை தலைமையிடமாகக் கொண்ட, 'கேப்பிடல்மைண்டு மியூச்சுவல் பண்டு' நிறுவனம், குறுகிய கால முதலீடுகளுக்கு ஏற்ற வகையிலான, கேப்பிடல்மைண்டு லிக்விட் பண்டினை அறிமுகம் செய்துள்ளது.
'லிக்விட் பண்டு' என்பது, செபி விதிகளின்படி, அதிகபட்சம் 91 நாட்கள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட கருவூல ரசீது, அரசு கடன் பத்திரம் மற்றும் டிபாசிட் சான்றிதழ் ஆகியவற்றில் மட்டும் முதலீடு செய்யப்படும்.
மற்ற பண்டுகளோடு ஒப்பிடுகையில், இதன் முதிர்வுகாலம் குறைவு என்பதால், வட்டி அபாயம் மிகக் குறைவாக இருக்கும். அவசர தேவைகளுக்கு பணத்தை எடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

