ADDED : டிச 15, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனேவைச் சேர்ந்த பிரைடு ஹோட்டல்ஸ், அடுத்தாண்டு மார்ச்சில் புதிய பங்கு வெளியீடுக்கு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த அக்டோபரில் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. ஆபர் பார் சேல் முறையில், ஆரம்பகட்ட முதலீட்டாளர்களின் 3.92 கோடி பங்குகள் விற்பனையுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 260 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில், 159.68 கோடி ரூபாயை தன் பழைய ஹோட்டல்களை புதுப்பிக்கவும், 40 கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

