ADDED : செப் 29, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ லுவலக பகிர்வு தளமான வீவொர்க் இந்தியா, 3,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர் வசமுள்ள 4.63 கோடி பங்குகள் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
'எம்பஸி' குழுமத்துக்குச் சொந்தமான வீவொர்க் இந்தியா, டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சேவைகளை அளித்து வருகிறது. வரும் அக்., 3 - 7 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். அக்., 10ல் இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.