sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 நஷ்டமாக உள்ள நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட தடை வேண்டும்

/

 நஷ்டமாக உள்ள நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட தடை வேண்டும்

 நஷ்டமாக உள்ள நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட தடை வேண்டும்

 நஷ்டமாக உள்ள நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட தடை வேண்டும்


ADDED : ஜன 01, 2026 02:53 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நஷ்டத்தில் இயங்கும் 'குயிக் காமர்ஸ்' துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வெளியிட தடை விதிக்குமாறு, ஏ.ஐ.சி.பி.டி.எப்., எனும் 'அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு' செபியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'ஸெப்டோ' போன்ற நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டாத நிலையில், ஆரம்பகால முதலீட்டாளர்கள் வெளியேற ஐ.பி.ஓ.,வை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர். நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கும்போது, அதில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய நிறுவனங்களின் வர்த்தக முறைகள் குறித்து இந்தியப் போட்டி ஆணையத்தில் ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணை முடியும் வரை, புதிய ஐ.பி.ஓ.,க்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விநியோகஸ்தர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான இடமாக பங்குச் சந்தைகள் மாறி விடக்கூடாது. ஒரு நிறுவனம் லாபம் ஈட்டும் முன் ஐ.பி.ஓ., வெளியிடுவது அபாயகரமானது.

- தைர்யஷீல் பாட்டீல், தலைவர் ஏ.ஐ.சி.பி.டி.எப்.,@

@






      Dinamalar
      Follow us