UPDATED : ஜன 29, 2026 01:53 AM
ADDED : ஜன 29, 2026 01:52 AM

க டந்த 2025ம் ஆண்டில், பங்குச்சந்தைகள் அதிக ஏற்ற இறக்கமின்றி காணப்பட்ட போதிலும், மியூச்சுவல் பண்டுகளில் புதிதாக 64 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்துள்ளதாக தரவுகள்
கூறுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிட்டதட்ட 40 சதவீதம் குறைவாகும். 2024ல் மியூச்சுவல் பண்டுகளில், ஒரு கோடி புதிய முதலீட்டாளர்கள் இணைந்திருந்தனர்.
2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ல் புதிய பண்டுகள் குறைவாகவே அறிமுகப்படுத்தப்பட்டன; சில திட்டங்களில், கடந்த 3 ஆண்டுகளில் வருமானம் குறைந்தது போன்றவையே, கடந்த ஆண்டில் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைய காரணமாக கூறப்படுகிறது.

இருப்பினும், மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நகர்ப்புறங்களை தாண்டி, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதன் வாயிலாக, அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என, 'கோட்டக் மியூச்சுவல் பண்டு' நிறுவன தலைமை செயல் அதிகாரி நிலேஷ் ஷா தெரிவித்துள்ளார்.

