ADDED : பிப் 20, 2026 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால், சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 4 சதவீதம் உயர்ந்து, 70 டாலரை தாண்டியது. இதன் காரணமாக, 'பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்' உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பங்குகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன.
சரிவுக்கான காரணம்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான 'ஹார்முஸ்' ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளதும், ஓமன் கடலில் ரஷ்யா - ஈரான் மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சியும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

